சீனாவில் விழுந்த பிரம்மாண்ட பள்ளம்… டோக்சுரி புயலும், மூழ்கடிக்கும் வெள்ளமும்!

பூமியின் வட துருவப் பகுதியில் இயல்பு நிலையை தலைகீழாக புரட்டி போடும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா முதல் ஆசியா வரை இதேநிலை தான். கடும் வெயில், அணைக்க முடியாத காட்டுத்தீ, கொட்டித் தீர்க்கும் பெருமழை, மூழ்கடிக்கும் பெருவெள்ளம் என இயற்கை பாடாய்படுத்தி வருகிறது.

சூறைக்காற்றுடன் மழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்

பெய்ஜிங் டோக்சிரி புயல்

குறிப்பாக சீனாவில் ஒருபக்கம் முரட்டு வெயில் என்றால் மறுபக்கம் பேய் மழை. கோடைக் காலங்களில் சீனாவின் நிலை என்பது புயல்களும், கனமழையுமாக இருக்கிறது. அதில் நடப்பாண்டு மட்டும் விதிவிலக்கல்ல. பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டோக்சுரி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

140 ஆண்டுகளில் இல்லாத மழை… 27 பேர் பலி.. கொட்டும் மழையால் உருக்குலைந்த சீனா!

ஜூவுஜூவு அடுக்குமாடி குடியிருப்பு

சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் ஜூவுஜூவு மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அடிப்பகுதி பெரும் சேதமடைந்தது.

வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இதனால் மிகப்பெரிய பள்ளம் உருவானது. அதில் வெள்ளநீரில் பாய்ந்தோடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பலரும் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்து வருகின்றனர். பெய்ஜிங்கில் பெய்து வரும் மழை வரலாறு காணாத ஒன்று என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தல்… மூளை தின்னும் அமீபாவால் மேலும் ஒருவர் பலி!

விமான சேவை ரத்து

கடந்த 140 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை என்கின்றனர். பல இடங்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நகரில் இருந்து வெள்ளநீர் வடிய இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.