ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ பிரதமரை சந்தித்தார்.

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார்.

காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்துமூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் தெரிவித்தார்.

ஊருவரிகே வன்னிலஎத்தோ தலைமையில்அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து விரிவான முறையில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.