செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வந்த பிரம்மாண்ட பங்களா. ஒரே போடாக போட்ட அமலாக்கத்துறை.. மொத்தமும் போச்சே

கரூர்:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வந்த பிரம்மாண்ட பங்களாவை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. செந்தில் பாலாஜி காவலில் எடுக்கப்பட்ட இரண்டே நாட்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை திமுகவினரை அதிரச் செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 நாள் விசாரணையில் மொத்தம் அவரிடம் 600-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜியின் பணப்பரிமாற்றங்கள், அவரது பினாமி சொத்துகள் உள்ளிட்ட அனைத்து டீலிங்கும் அசோக் குமாருக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரை அமலாக்கத்துறை வலைவீசி தேடி வருகிறது. ஏற்கனவே நேரில் ஆஜராகுமாறு 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில்தான், அசோக் குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் கரூர் புறநகரில் 2 ஏக்கர் பரப்பவளவில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களாவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பிறகு, நிர்மலாவை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த சூழலில், நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் அந்த பெரிய பங்களாவை அமலாக்கத்துறை இன்று இரவு அதிரடியாக முடக்கியுள்ளது. அமலாக்கத்துறையினரின் இந்த அடுத்தடுத்தத அதிரடியால் திமுக வட்டாரத்தில் ஒருவித பரபரப்பு காணப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.