Jailer: நான் தலைவரின் வீட்டிற்கு லேட்டாக போக அனிருத் தான் காரணம்..உண்மையை உடைத்த நெல்சன்..!

ரஜினியின் ஜெயிலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு வெற்றியை கொடுக்கவேண்டும் என ரஜினியும் நெல்சனும் தீவிரமாக உழைத்து வந்துள்ளனர்.

அந்த கடுமையான உழைப்பிற்கு தற்போது பல கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் திரையில் வெளியானது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். பழைய ரஜினியை மீண்டும் பார்த்ததாகவும், எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினிக்கு சரியான ஹிட் படத்தை கொடுத்த நெல்சனுக்கு நன்றி என்றும் ரசிகர்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

தலைவரை சந்திக்க தாமதம்

வசூலை பொறுத்தவரை இப்படம் நாளுக்கு நாள் ஒரு சாதனையை படைத்து வருகின்றது. தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Jailer: சென்சாரில் நீக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி..செம மாஸா இருந்திருக்குமே..!

இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியான பிறகு தற்போது ஊடகங்களுக்கு நெல்சன் பேட்டி கொடுத்து வருகின்றார். அந்த பேட்டிகளில் நெல்சன் பல விஷயங்களை பற்றி பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் ஜெயிலர் கதையை ரஜினியை சந்தித்து சொல்ல தான் ஏன் தாமதமாக போனேன் என்பதை பற்றி நெல்சன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, நெல்சன் என்னை சந்தித்து கதை சொல்ல தாமதமாக வந்ததாகவும், லேட்டாக வந்துவிட்டு நல்லதா ஒரு காபி சொல்லுங்க என கேட்டதாகவும் நகைச்சுவையாக பேசினார் ரஜினி. இந்த விஷயம் சமூகத்தளங்களில் செம வைரலானது. இந்நிலையில் இதற்கு தற்போது நெல்சன் விளக்கமளித்துள்ளார்.

உண்மையை உடைத்த நெல்சன்

அதாவது ரஜினியை சந்தித்து நான் கதை சொல்ல லேட்டாக போனதற்கு அனிருத் தான் காரணம். ஏனென்றால் அனிருத் எப்போதும் இரவில் தான் வேலை செய்வார். பீஸ்ட் படத்தின் வேலைகளுக்காக அப்போது அனிருத்தின் ஸ்டுடியோவில் தான் நான் இருந்தேன். இரவு வேலையை துவங்கி அதிகாலை நான்கு மணி வரை பீஸ்ட் படத்தின் வேலைகள் அனிருத்தின் ஸ்டுடியோவில் போய்க்கொண்டிருந்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதன் பிறகு நான் வீட்டிற்கு வந்து தலைவரை சந்தித்து கதை சொல்ல கிளம்ப தாமதமாகிவிட்டது என கூறியுள்ளார் நெல்சன். இதுமட்டுமல்லாமல் படத்தை பற்றியும், ரஜினி விஜய்யை பற்றியும் பல விஷயங்களை நெல்சன் பகிர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.