செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது… அமலாக்கத்துறை அதிரடி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத அசோக்குமார், ஆரம்பத்தில் ஆவணங்களை சேகரிப்பதாக விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து அவருக்கும் இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகாத நிலையில் தற்போது அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக்குமார் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் விமான நிலையங்களுக்கு அமலாக்கத்துறை லுக்கவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் அசோக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தமிழகம் அழைத்து வர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் வீட்டை கடந்த வாரம் அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.