பண மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் அமலாக்கத்துறை அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691923388_113_WhatsApp_Image_2023_08_12_at_3_59_43_PM.jpeg)
அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாள்கள் விசாரணை நடத்திமுடித்த அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரை நேற்று ஆஜர்படுத்தி, 3,000 பக்க ஆவணங்களையும், 120 பக்க குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்திவந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரின் சகோதரர் அசோக் குமார் கட்டிவரும் வீட்டை கடந்த வாரம் முடக்கினர்.
அதோடு, அசோக் குமாரிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைத் தேடிவந்தனர். மேலும், அசோக் குமார் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அனைத்து விமான நிலையங்களிலும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கேரளாவிலுள்ள கொச்சி விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அசோக் குமாரைக் கைதுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/64d1f48f20b11.jpg)
பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையாக, கேரளாவிலுள்ள நீதிமன்றத்தில் முறையாக அசோக் குமாரை ஆஜர்படுத்தி, பின்னர் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரைக் கொண்டுவருவதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs