Jailer: பல வருடங்களுக்கு பிறகு ஜெயிலர் படத்திற்காக ரஜினி செய்த காரியம்..காரணத்தை கூறிய நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,வசந்த ரவி ,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.

புகைபிடிக்கும் காட்சி

அதன் காரணமாகவே இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கும் நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

Jailer: சென்சாரில் நீக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி..செம மாஸா இருந்திருக்குமே..!

ரஜினி, மோகன்லால் மற்றும் ஷிவ்ராஜ்குமார் ஸ்லோ மோஷனில் சுருட்டு வைத்துக்கொண்டு வரும் காட்சியை பார்த்து ரசிகர்கள் திரையரங்கில் ஆர்ப்பரித்தனர். இந்த காட்சியை தான் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருபக்கம் இந்த காட்சிக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மறுபக்கம் ஒரு சிலர் ரஜினி சுருட்டு பிடித்ததை தவிர்த்திருக்கலாம் என கூறி வருகின்றனர். பாபா படத்திற்கு பிறகு ரஜினி தன் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு ஜெயிலர் படத்தில் அவர் புகைபிடிக்கும் காட்சியில் நடித்தது ஏன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

நெல்சன் சொன்ன காரணம்

அவர் கூறியதாவது, ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சுருட்டு பிடிக்கவேண்டும் என நான் ரஜினியிடம் கூறினேன். முதலில் அவர் யோசித்தார். அதன் பிறகு கதைக்கும், அந்த காட்சிக்கும் தேவை என்பதால் சுருட்டு பிடிப்பது போல நடிக்க ஒப்புக்கொண்டார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ரஜினி ஆகியோர் ஒரே டீமை சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்தவே தான் அந்த சுருட்டு காட்சியை வைத்தேன். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ரஜினி அந்த சுருட்டு பிடிக்கும் காட்சியில் நடித்தார் என கூறியுள்ளார் நெல்சன். இந்நிலையில் தற்போது அந்த காட்சியை தான் ரசிகர்கள் திரையில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.