இடி மின்னலுடன் கனமழை: விடுமுறை உண்டா, இல்லையா? சற்று முன் வெளியான அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்து ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட்ங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னையைப் பொறுத்தவரை பரவலாக மாநகர் முழுவதும் மழை பெய்தது. தற்போதும் சில இடங்களில் பெய்து வருகிறது. கிண்டி, ஆதம்பாக்கம், வேளச்சேரி,திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரினா கடற்கரைப் பகுதிகள், பட்டினப்பாக்கம் கோயம்பேடு, மதுரவாயல், நெற்குன்றம், வண்டலூர், அம்பத்தூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

அதேபோல் திருப்பபோரூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு, வாலாஜாபாத் பகுதிகளிலும் நள்ளிரவு நல்ல மழை பெய்தது.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

இதனால் சென்னையைச் சுற்றியுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளுக்காவது பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை சுதந்திர தின விடுமுறை வரும் நிலையில் திங்கள் கிழமையும் சேர்த்து அரசு விடுமுறை அறிவிக்குமா என்றும் மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படியான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்றைய தினம் சில மாவட்டங்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் விடுமுறை அறிவிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.