சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் நேற்றிரவு தொடங்கி தற்போதுவரை பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது.