‛கிங் ஆப் கோதா' புரமோஷனில் துல்கருக்கு தோள்கொடுத்த ராணா – நானி

தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் துல்கர் சல்மான்.. அவர் நடித்த சீதாராமம் படம் வெளியாகி ஒரு வருட கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கிங் ஆப் கோதா'. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக இது வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள சீனியர் இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ‛கிங் ஆப் கோதா' வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்துள்ள துல்கர் சல்மான் ஐதராபாத்தில் இந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர்களான நானி மற்றும் ராணா இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.