"முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்" பாடல் நாயகி யார் ? அவர் என்ன செய்கிறார் தெரியுமா ??

‘முதற்கனவே முதற்கனவே’ பாடல் பிரபலம் நடிகை ரின்கு கண்ணாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

​ரின்கி கண்ணா​முதற்கனவேகாதல் தோல்வி அல்லது காதல் வலி ப்ளேலிஸ்ட் என்றாலே இந்த “முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்” பாடல் இல்லாமல் இருக்காது. இந்த படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், இந்த பாடல் தற்போதும் பலரின் ப்ளேலிஸ்டில் இருக்கிறது.. இந்த பாடலை கேட்டாலே இந்த நடிகையின் முகம் தான் நினைவிற்கு வரும்.
​ரின்கி கண்ணா சிறுவயதில்இவர் பெயர் ரின்கி கண்ணா. அந்த பாடலின் எமோஷனை அப்படியே முகத்தில் காட்டியிருப்பார். அந்த அளவிற்கு அந்த பாடலில் வாழ்ந்திருப்பார். இவரின் குடும்பத்தில் உள்ள 4 பேருமே சினிமாக்காரர்கள் தான்.. பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பில் கபாடியாவின் இளைய மகள்தான் ரின்கி. இவரின் மூத்த சகோதரியான ட்வின்கில் கண்ணாவும் பாலிவுடில் நடிகை..

​சினிமாவில் ரின்கி5 வருடத்தில் 9 படங்களில் நடித்துள்ளார். 1999இல் பியார் மெயின் கபி கபி என்னும் படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்காக ஜீ சினி விருதுகளிடம் இருந்து சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கிறார். பின்னர் சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். 2001இல் பிரசாந்துடன் இணைந்து மஜுனு படத்தில் நடித்தார்.

​கணவர் சமீருடன் ரின்கிஎன்னதான் வருடத்திற்கு 2 படங்கள் என நடித்திருந்தாலும், சினிமா அவருக்கு செட் ஆகவில்லை போல. சாமிலி திரைப்படத்தை முடித்த பிறகு, தொழிலதிபரான சமீர் சரணை திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.. ரின்கி-சமீர் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.. அவ்வப்போது குடும்பத்தினரை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாராம் ரின்கி..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.