இந்திய-பாக்., வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி:கெத்தாக நடைபோட்ட இந்திய வீரர்கள்!| India-Pakistan, Wagah border flag hoisting ceremony

வாகா:அடாரி எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம்.

அந்த தேசியக் கொடியை மாலை நேரத்தில் இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

latest tamil news

வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். வழக்கமான கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இறுதியில் நாட்டின் தேசிய கொடி தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண அரசு உயர் அதிகாரிகளுடன், பொதுமக்களும் கண்டுகளித்து வீரர்களுக்கு கைதட்டி உற்சாகமூட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.