நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்திற்காக நெல்சன் எந்தளவிற்கு விமர்சனங்களை சந்தித்தாரோ அந்த அளவிற்கு நெல்சன் தற்போது பாராட்டுகளை சந்தித்து வருகின்றார். வேட்டைமன்னன் என்ற படத்தின் மூலமே நெல்சன் இயக்குனராக அறிமுகமாக இருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதை அடுத்து விஜய் டிவியில் பணிபுரிந்தார். பின்பு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டார் நெல்சன். இதைத்தொடர்ந்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தையும் இயக்கி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பான இயக்குனராக வலம் வந்தார்.
நெல்சன் ரொம்ப கஷ்டப்பட்டாரு
அதைத்தொடர்ந்து அவருக்கு விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் சற்று சறுக்கியதால் நெல்சன் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். அதுவரை அவரைபாராட்டி வந்த ரசிகர்கள் அனைவரும் அவரை ட்ரோல் செய்ய துவங்கினர். அளவுக்கு அதிகமான ட்ரோல்களை நெல்சன் பீஸ்ட் படத்தினால் சந்தித்தார்.
21 years of baba: ரஜினி ரசிச்சு ரசிச்சு எடுத்த படம்..பாபா பற்றி பலருக்கும் தெரியாத பல தகவல்கள் இதோ..!
இருந்தாலும் அவருக்கு ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சன் மிகப்பெரிய கம்பாக்கை கொடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ஜெயிலர் நெல்சனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஒரு கம்பாக் படமாக அமைந்துள்ளது.
எனவே பீஸ்ட் படத்தின் போது நெல்சனை கடுமையாக விமர்சித்த ரசிகர்கள் தற்போது அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நெல்சனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரெடின் கிங்ஸ்லி தற்போது சமயம் தமிழ் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் பேசியதாவது, நெல்சன் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கின்றார் என கூறினார். மேலும் பீஸ்ட் படத்தின் போது நெல்சான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன் காரணமாக நெல்சன் ரொம்ப கஷ்டப்பட்டாரு. வெற்றி தோல்வி அனைவரின் வாழ்க்கையிலும் வரும். ஆனால் ஏன் நெல்சனை மட்டும் இப்படி விமசித்தார்கள் என தெரியவில்லை. அவர் மீது ஏன் இவ்வளவு வன்மம் என்றும் புரியவில்லை என்றார் கிங்ஸ்லி.
ஆதங்கப்பட்ட கிங்ஸ்லி
இந்நிலையில் நெல்சன் மற்றும் கிங்ஸ்லி ஒரு விருது விழாவிற்கு சென்றபோது அங்கு அவர்கள் சரியாக நடத்தப்படவில்லை என ஒரு பேச்சு இருந்து வந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அந்த விருது விழாவில் நாங்கள் வேறு வழியில் சென்றுவிட்டோம். அதில் அவர்களின் தவறு எதுவுமில்லை என பேசினார் கிங்ஸ்லி.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக தனுஷை வைத்து படமெடுக்க போகிறாரா என கேட்ட்டதற்கு அப்படி ஒன்றும் இல்லை. இன்னும் அடுத்த படத்தை பற்றி நெல்சன் யோசிக்கவே இல்லை என கூறியுள்ளார் கிங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது.