Jailer: ஜெயிலரை பாராட்டிய அரசியல் தலைவர்: இவர் பாராட்டுவார்னு சத்தியமா எதிர்பார்க்கல

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்த ஜெயிலர் படம் பிளாக்பஸ்டராகியிருக்கிறது.

ரஜினி படம் என்றாலே கலெக்ஷனுக்கு பஞ்சமில்லை – கமலா தியேட்டர் ஓனர் பேட்டி
படம் ரிலீஸான ஆறு நாட்களில் இந்தியாவில் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. மேலும் உலக அளவில் ரூ. 400 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

Jailer: ஜெயிலர் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடிப்பு: உலக அளவில் ரூ. 400 கோடியை நெருங்குது

வார நாட்களில் கூட ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டமாக இருக்கிறது. அதனால் ரூ. 400 கோடியை எளிதில் தாண்டிவிடும் என நம்பப்படுகிறது.

ஜெயிலர் படத்திற்கு தமிழ்நாடு தவிர்த்து கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. கேரளா, தெலுங்கானா- ஆந்திராவில் மட்டும் ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது ஜெயிலர்.

இந்நிலையில் தான் யாருமே எதிர்பார்க்காத ஒருவர் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மங்கோலியாவின் முன்னாள் அதிபரான Namabryn Enkhbayar சொந்த விஷயமாக பெங்களூருக்கு வந்திருந்தார். மங்கோலியாவில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் அவருக்கு கலை, கலாச்சாரம் மீது தனி பிரியம். பெங்களூர் வந்த இடத்தில் ஜெயிலர் படத்தை பார்த்திருக்கிறார்.

படம் பார்த்த அவர் ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தை மனதார பாராட்டியிருக்கிறார். இது ஒரு இன்ஸ்பையரிங் படம். தற்போதைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானது என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மங்கோலியாவின் முன்னாள் அதிபர் ஜெயிலரை பாராட்டியது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஜெயிலர் படம் அமெரிக்காவில் வேற லெவலில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஜெயிலர் படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை காட்சி வைக்கவில்லை. இருப்பினும் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 23 கோடி வசூல் செய்தது. உலக அளவில் முதல் நாளிலேயே ரூ. 72 கோடி வசூலித்தது.

காலையில் எழுந்ததும் ஜெயிலரின் வசூல் விபரத்தை தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்கள் பக்கம் வந்துவிடுகிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்ளில் ஜெயிலருக்கு தான் தமிழகத்தில் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் பட ரிலீஸுக்கு முன்பு இமயமலைக்கு கிளம்பிச் சென்றார் ரஜினிகாந்த். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு இமயமலைக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து கிளம்பியிருக்கிறார்.

தான் எப்பொழுது இமயமலைக்கு வந்தாலும் தனி சக்தி கிடைப்பதாக அங்கிருக்கும் தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தான் இமயமலைக்கு வந்ததற்கும், ஜெயிலர் படம் வெற்றி பெற்றிருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக நினைக்கிறார் ரஜினி.

ஆசிரமத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடியிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் வெள்ளை நிற ஜிப்பா, நெற்றியில் விபூதி, குங்குமம் என ஆளே வித்தியாசமாக இருக்கிறார். ஆனால் அவர் முகத்தில் ஒரு தெளிவு இருப்பது தான் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Samantha:மேடையில் சமந்தாவை அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்த விஜய்: ப்ப்பா செம்ம கெமிஸ்ட்ரி

ஆகஸ்ட் 17ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினி. ஊருக்கு வந்த பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.