இதற்கான வள ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு என்பன அரசினால் வழங்கப்படும் எனத் தெரிரிவத்தார். இது மிகவும் விரைவான மற்றும் அத்தியவசியமான செயற்பாடாக கருத்திற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பின் போது அலாகா சிங் உரையாற்றுகையில் சர்வதேச மட்டத்தில் இரசாயன ஆய்வு கூடமொன்றை நிருமாணிப்பது தொடர்பாக அவசியமான சகல ஒத்துழைப்புக்களையும் உலக சுகாதார அமைப்பின் ஊடாக இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கு ஊடாக சுகாதாரத் துறை சார் நிபுணர்கள் என சுகாதாரத் துறையில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்கும் பொறிமுறையொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என அலாகா சிங் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் கொரோனா மற்றும் ஒளடதங்கள் விநியோக செயற்பாடு மற்றும் வைத்தியத் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானியும் பங்கேற்றார்.