தமிழகத்திற்கு காவிரி நீரை உடனே நிறுத்துங்கள்… கொதிக்கும் பசவராஜ் பொம்மை!

காவிரியின் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதையடுத்து உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த 10 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு அரசு துரோகம் செய்துள்ளது என்றும் காவிரி விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசின் அணுகுமுறையால் கர்நாடக காவிரி படுகை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியதால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது என்றும் மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சியான திமுகவை திருப்திப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதாகவும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக விவசாயிகளின் நலன்கள் புறக்கணிப்பட்டுள்ளது என்றும் தமிழக சட்டசபையில், தி.மு.க., கூட்டணியை மகிழ்விப்பதற்காக, கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது என்றும் பசவராஜ் பொம்மை விளாசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.