iPhone 15 வெளியாவதற்கு முன்பே, உற்பத்தியை குறைத்த ஆப்பிள் நிறுவனம்! இதுதான் காரணமாம்!

கலிபோர்னியா மாகாணத்தின் குபெர்டினோ நகரில் இருந்து செயல்பட்டு வரும் டெக் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் இன்க் நிறுவனம் தன்னுடைய ஆண்டு விழா நடைபெறும் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐபோன்களின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற செப்டம்பர் மாதம் ஐபோன் 15 வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 15 உற்பத்தி குறைவு

இந்நிலையில் ஐபோன் உற்பத்தி இந்தாண்டு குறையலாம் என்று டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணமாக ஐபோனுக்கு தேவையான டிஸ்பிளே மற்றும் கேமராக்களை உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே கூறப்படுகிறது. ஆனாலும், ஐபோன் 15 வெளியாகும் தேதியில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

6 மில்லியன் ஐபோன் குறையலாம்

2023ம் ஆண்டில் 83 மில்லியன் ஐபோன் 15 யூனிட்டுகள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 77 மில்லியன் யூனிட்டுகள் மட்டுமே தயாராகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் சொல்ல படுகின்றன.

ஐபோன் பாகங்கள் வருவதில் சிக்கல்

சோனி கேமரா சென்சார்கள், ப்ரோ மாடல்களுக்கான டைட்டானியம் ஃப்ரேம் மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றின் இறக்குமதி தாமதமாவதின் விளைவே ஐபோன் 15 உற்பத்தி குறைவுக்கு காரணமாக இருக்கும் என்று டெக் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐபோன் 15 விலை அதிகம்

ஆப்பிள் நிறுவனத்தின் தகவல்களின்படி, கடந்த காலாண்டிலேயே ஐபோன் விற்பனையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், வருகின்ற ஐபோன் 15 மற்றும் அதன் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் முந்தைய மாடல்களை விட அதிக விலைக்கு விற்பனைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.