புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு| Discovery of a new type of coronavirus

பெய்ஜிங்: புதிய வகை வீரியம் மிக்க கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது. இதனையடுத்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.