போனில் சாட்டிங் செய்துகொண்டிருந்த தாய்; கோடாரியால் வெட்டி கொலைசெய்த 17 வயது மகன் – மும்பை அதிர்ச்சி

மும்பை அருகிலுள்ள வசாய் பரோலே என்ற இடத்தைச் சேர்ந்தவர் சோனாலி (35). இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சோனாலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவரது மகன் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவதுண்டு. இரவில் மைனர் மகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவருக்கு சாப்பாடு எடுத்து கொடுத்துவிட்டு சோனாலி தனது மொபைல் போனில் ஏதோ மெசேஜ் பண்ணிக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை. உடனே கோபத்தில் வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து தனது தாயாரை அந்தச் சிறுவன் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்பெண் உடனே பிவாண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர் அசோக் காம்ப்ளே தெரிவித்தார்.

கணவருடன் வர்ஷா

இதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சிக்லி என்ற இடத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் வர்ஷா. இவருக்கு 3 மற்றும் 8 வயதில் இரு மகள் இருக்கின்றனர். வர்ஷாவின் கணவர் கிஷோர் விவசாயி ஆவார். சம்பவத்தன்று பணியில் இருந்து வந்த மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலைசெய்த கிஷோர், வீட்டில் இருந்த தனது 3 வயது மகளையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

அவர் தனது வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வர்ஷாவின் 8 வயது மகள் பள்ளிக்கு சென்று இருந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பினார். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.