பேனர் விவகாரம்; கர்நாடக துணை முதல்வருக்கு ரூ.50,000 அபராதம் – பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை

கர்நாடக உயர் நீதிமன்றம், `பெங்களூர் நகரில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ், பேனர்கள், போர்டுகள் அனைத்தும் 3 வாரங்களுக்குள் அகற்றப்பட வேண்டும்’ என இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பெங்களூர் நகரத்தின் வளர்ச்சிக்கு பொறுப்பான துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “மூன்று முதல் நான்கு நாள்களுக்குள் (அதாவது ஆகஸ்ட் 15-க்குள), பெங்களூர் நகரம் முழுவதும் ஃப்ளெக்ஸ்களுக்குத் தடை விதிக்கிறோம்.

பெங்களூர்

யாரும் ஃப்ளெக்ஸ் வைக்க அனுமதிக்கப்படாது. அது நானாக இருந்தாலும், என் கட்சியாக இருந்தாலும், ஆளும் அரசியல் தலைவர்களாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரியே. எந்த ஃப்ளெக்ஸ்களும் அனுமதிக்கப்படாது. எனவே, பேனர், ஃப்ளெக்ஸ் வைத்து சட்டமீறல் நடந்தால், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், பெங்களூருரின் குயின்ஸ் சாலையிலுள்ள கே.பி.சி.சி (பெங்களூர் மாநகராட்சி) அலுவலகத்துக்கு வெளியே, பேனர் வைக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவரும், கே.பி.சி.சி தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூர் மாநகராட்சி ரூ.50,000 அபராதம் விதித்திருக்கிறது.

டி.கே.சிவக்குமார்

இது குறித்துப் பேசிய அதிகாரி ஒருவர், “வசந்த நகர் சப்-டிவிஷனைச் சேர்ந்த உதவி வருவாய் அதிகாரி (ஏ.ஆர்.ஓ) தலைமையிலான குழு, கே.பி.சி.சி அலுவலகத்துக்கு வெளியிலிருந்த அங்கீகரிக்கப்படாத பேனரை அகற்றி, கே.பி.சி.சி தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.