ஸ்டாலின் சாய்ஸ் இவர் தான் – முட்டுக்கட்டை போடும் ஆளுநர்: ஆர்.எஸ்.பாரதி ஓப்பன் டாக்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதும் ஒப்புதல் அளிக்காமல் அதை கிடப்பில் போட்டுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபியாக பதவி வகித்த சைலேந்திர பாபு அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதை திமுகவின் அமைப்புச் செயலாளர்

உறுதிபடுத்தியுள்ளார்.

சைலேந்திரபாபுவை சமூக நீதியின் அடிப்படையில் அந்த பதவிக்கு கொண்டு வர ஸ்டாலின் முயற்சிப்பதாகவும் ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சியின் மூலம் சமூக நீதியை நிலைநாட்டினார். கலைஞர் போன்று சமூக நீதி அடிப்படையில் சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக முதலமைச்சர்

தேர்வு செய்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் கொடுத்தும் ஒப்புதல் தரவில்லை” என்றார்.

தமிழ்நாடு புதுச்சேரி மாணவர்களுக்கு தமிழிசை எதிரி – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ஆளுநர் ரவி தன்னுடைய நடவடிக்கைக்கான விலையை தர நேரிடும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர், “ஆளுநர் ரவி தன்னுடைய வேலையை தவிர பிற வேலைகளை செய்துவருகிறார். தமிழ்நாட்டு மக்களை சீண்டிப் பார்க்கிறார்.

திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி செய்கிறார். சைலேந்திரபாபு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆளுநர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.