தமிழ் திரையுலகை பெருமைப்பட செய்த கடைசி விவசாயி..மிஸ்ஸான விருதுகள்..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

69 ஆவது திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் விருதுகளை தட்டி செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவே நடந்துள்ளது அவர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை கடைசி விவசாயி திரைப்படமும், சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் பாடியதற்காக ஷ்ரேயா கோஷலுக்கும் வழங்கப்பட்டது. அதை தவிர வேறெந்த தமிழ் படங்களும், தமிழ் கலைஞர்களுக்கும் விருதுகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.