நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் சுமார் 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவில் திட்டமிட்டப்படி தரையிறங்கி சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரை வெளியே கொண்டு வரும் பணி தொடங்கியது. விக்ரம் லேண்டரின் சாய்வுதள கதவு திறக்கப்பட்டு சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு பிரக்யான் ரோவர் முழுமையாக விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரை இறங்கியது.

ரெட் அலர்ட்… கொட்டும் பேய் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை.. பேராபத்தில் இமாச்சலப் பிரதேசம்!

இதனை உறுதி செய்த இஸ்ரோ, இந்தியா நிலவில் நடைபோடுவதாக பெருமிதத்துடன் அறிவித்தது. மேலும் பல அப்டேட்டுகள் விரைவில் என்றும் கூறியிருந்தது இஸ்ரோ. இந்நிலையில் இன்று மாலை சந்திரயான் 3 மிஷனின் செயல்பாடுகள் அனைத்தும் அட்டவணைப்படி நடைபெறுவதாகவும், அனைத்து அமைப்புகளும் நார்மலாக இருப்பதாகவும் இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

மேலும் லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன என்றும் ரோவர் மொபைலிட்டி செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட இஸ்ரோ, ப்ராபல்ஷன் மாட்யூலில் உள்ள SHAPE பேலோட் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

சந்திரயான் 3 திட்டம், எதிர்பார்த்தப்படி சரியாக நடந்து வருவதை அறிந்த நெட்டிசன்கள் இஸ்ரோவுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா தரையிறங்குவதற்கு சற்று முன்பு படம் பிடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் மூவிங்கில் இருக்கும் போது நிலவை படம் பிடித்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.