இன்னைக்கு ராத்திரி ரெயின்கோட்ட மறந்துறாதீங்க.. ரெக்கார்டை உடைக்க போகும் மழை.. வெதர்மேன் அவசர அலர்ட்

சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பலத்த

பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேகம் எல்லாம் திரண்டு வந்து ரெடியாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் மழை கொட்டும் எனத் தெரிகிறது. இதனிடையே, இந்த மழை புதிய ரெக்கார்டை படைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் அலற வைப்பதும், இரவில் மழை வந்து வெலவெலக்க வைப்பதுமாக நிலைமை இருக்கிறது.

குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக மழை அடித்து நொறுக்கியது. அதேபோல, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களையும் வைத்து செய்தது மழை.

இந்நிலையில், இன்று இரவு எங்கெங்கு மழை கொட்டி தீர்க்கப் போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழை மேகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. இன்று இரவு எங்கேயாவது ஷாப்பிங் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் குடையையும், ரெயின்கோட்டையும் மறந்து விடாதீர்கள். எப்போது வேண்டுமானலும் மழை கொட்டலாம்.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 333 மி.மீ. என்ற அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது மிக அதிகம். இருந்தபோதிலும், கடந்த 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீனம்பாக்கத்தில் 395 மி.மீ. மழை பதிவாகி இருந்தது தான் ரெக்கார்டாக உள்ளது. இன்னும் 3 நாட்களில் அந்த ரெக்கார்டை மழை உடைக்குமா என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.