சோஷியல் மீடியாவில் சித்ரவதை; சகோதரனின் துணையோடு இருவரை அடித்துக் கொன்று, உடலை மலையில் வீசிய பெண்!

மும்பை அருகிலுள்ள கசரா மலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்ளூர் மக்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனை செய்ததில், அவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரும் யார் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அதோடு அவர்களின் உடலை யார் கொண்டு வந்து போட்டது என்று கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.

மலைப் பகுதியில் எந்த விதமான கண்காணிப்பு கேமராவும் இல்லை. எனவே குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கொலைசெய்யப்பட்டவர்களில் ஒருவரது சட்டைப் பையில் பொலேரோ கார் ஒன்றின் சாவி இருந்தது. அந்த சாவியை சம்பந்தப்பட்ட கார் கம்பெனியிடம் கொடுத்து அந்த காரை யார் வாங்கியது என்பதை கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டனர்.

கார் கம்பெனி நிர்வாகம் அந்த கார் தொடர்பான தகவல்களை போலீஸாரிடம் கொடுத்தது. அதனடிப்படையில் அந்த கார் மகாராஷ்டிரா மாநிலம், லோனி என்ற இடத்தைச் சேர்ந்த சாஹில் பதான் என்பவருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவரும், அவரின் நண்பர் சுபியான் என்பவரும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் காணாமல்போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மொபைல் போன் அழைப்புகளின் விவரங்கள், சோசியல் மீடியா தகவல்களை ஆய்வுசெய்து ஷிர்டியைச் சேர்ந்த குணால் பிரகாஷ், மனோஜ், பிரசாந்த், பெரோஸ் பதான் ஆகியோரைக் கைதுசெய்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது சகோதரிக்கு சாஹில் பதான் அடிக்கடி போன் மூலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். சோசியல் மீடியாவிலும் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் இது குறித்து அந்தப் பெண் தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

கைது

உடனே சாஹில் பதானுக்கு தக்கபாடம் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று நினைத்து சாஹிலை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி அப்பெண் தெரிவித்துள்ளார். அங்கு சாஹில் தனது நண்பர் சுபியானுடன் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அப்பெண்ணும் அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்தனர்.

இதில் சாஹில் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை நேரில் பார்த்த சுபியான் சம்பவத்தை போலீஸாரிடம் தெரிவிட்டு விடுவார் என்று கருதி அவரையும் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, உடலை பெட்சீட்டில் கட்டி காரில் எடுத்துச்சென்று கசரா மலைப் பகுதியில் போட்டுள்ளனர். இந்தக் கொலை கடந்த ஜூன் 17-ம் தேதி அகமத் நகர் என்ற இடத்தில் நடந்தது. கொலையில் தொடர்புடைய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய பெண் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.