பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருத்துவர்களுக்காக தனிப்பட்ட ரீதியாக காணிகளின் உரிமையை வழங்குவதற்கான உறுதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கும் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பாக இன்று (29) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;
நாட்டில் பாரம்பரிய வைத்தியத்தை முன்னேற்றுவதற்காகவும் பாரம்பரிய மருத்துவர்களுக்கு மதிப்பு, கௌரவம் வழங்குவதற்காகவும் கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேச செயலகப் பிரிவில் வைத்திய முன்மாதிரிக் கிராமமொன்று பாரம்பரிய வைத்தியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இவ்வைத்தியர்கள் ஒரே இடத்திற்கு வரும் பெருமளவான வைத்தியர்களின் கிராமமாக கடந்த காலங்களில் நாட்டிற்கும் மக்களுக்கும் பாரிய சேவைகளை ஆற்றியதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சரவைப் பேச்சாளர், இந்தக் காணிகளில் ஒரு ஏக்கர் அளவிலான நிலம் 25 வைத்தியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, அவர்களுக்கு சட்டரீதியாக அதற்கான உரிமை இல்லாதிருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இக்காணியின்குறிப்பிட்ட ஏக்கர் சுகாதார அமைச்சின் கீழ் சுகாதார செயலாளரின் பெயரில் காணப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் நீதவானின் ஆலோசனைகளைப் பெற்று பாரம்பரிய வைத்தியர்களுக்கே இக்காணிகளின் உரிமை உரித்தாதவதற்கு இணங்க கொடுப்பனவுப் பத்திரத்திற்கு ஊடாக உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மேலும் விபரித்தார்.

அத்துடன் பாரம்பரிய வைத்தியர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தாகும் எந்த இடத்தையும் வழங்குவதற்காக விசேட முயற்சியொன்றை சுதேச மருத்துவ அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான சட்டத்தரணி சிசிற ஜயக்கொடி மேற்கொள்வதாகவும் அது தொடர்பாக வெளியிடப்பட்டதாகவும் அதற்கிணங்க சுகாதார அமைச்சர் இவ்வமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.