ரெட் அலர்ட்: வெளுத்து வாங்கும் கனமழை.. தத்தளிக்கும் ஹைதராபாத்… பள்ளிகளுக்கு விடுமுறை!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஹைதராபாத்தில் 5 ஆம் தேதியான இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஹைதராபாத்துக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் நாள் முழுவதும் நகரில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிகக்கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. கனமழையை தொடர்ந்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.

மேலும் கனமழை காரணமாக வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் டிவிட்டரில் கேட்டுக்கொண்டார். கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலைகளா அல்லது ஆறா என சந்தேகிக்கும் அளவுக்கு மழை நீர் ஆறு போல் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சில மணி நேரங்களிலேயே 100 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓணம் பம்பர் லாட்டரி: ரூ. 25 கோடியை வெல்லப்போவது யார்? பரபரக்கும் டிக்கெட் விற்பனை… விற்று தீர்ந்த 50 லட்சம் டிக்கெட்டுகள்!

3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நகரம் முழுவதும் நீர் தேங்கிய பகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று நகரின் சில பகுதிகளில் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஹைதராபாத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.