10 years of Varuthapadatha Valibar sangam : 10 வருஷம் ஆச்சி !! ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணும் ஹா !!!

பெரிய குழுவருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த 2013இல் வெளியானது. இந்த படத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி என பல பேர் நடித்திருப்பார்கள். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்தார். காதல், காமெடி, குடும்பம் என பக்கா பேக்கஜ் படமாக இது அமைந்தது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே இந்த படம் பிடிக்கும்.
நம்ம போஸ் பாண்டி லதா பாண்டிஹீரோவாக சிவகார்த்திகேயன் ஹீரோயினாக ஸ்ரீ திவ்யா நடித்திருப்பார்கள். முதலில் தன் காதலுக்கு தூது அனுப்ப ஸ்ரீ திவ்யாவை பயன்படுத்துவார் போஸ் பாண்டி. பிறகு லதாவை சேலையில் பாத்ததும் காதலில் விழுந்துவிடுவார் நம்ம போஸ் பாண்டி. க்யூட்டான காதல் காட்சிகள் அரங்கேற இருவரையும் ஒன்றாக பார்க்க அப்படி அழகாக இருக்கும். சினிமாவில் தனது தொடக்க நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. இந்த படத்தின் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீ திவ்யா. இவரின் அழகான பேச்சுக்கும் இவரின் அழகுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
கதைக்கு வருவோமாசிம்பிளான கதையை கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் அழகாக எடுத்திருப்பார் இயக்குனர் பொன்ராம். சாதாரண காதல் கதையாக இல்லாமல், அங்கங்கே சில காமெடி, ரகளைகள், ஆடல் பாடல் என இருக்கும் இந்த படம். முதலில் காதலில் விழுவது என்னமோ லதா பாண்டிதான், ஆனால் நம்ம போஸ் பாண்டி காதலில் மூழ்கி, கடைசியில் பல வித்தைகளை செய்து லதா பாண்டியை திருமணம் செய்துகொள்வார் அதுவும் நம்ம லதா பாண்டியின் அப்பாவான சத்யராஜ் முன்னிலையில். அதிலும், வின்னர் படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெயரை எடுத்து அதை மையமாக்கி கதையை கொண்டு சென்றது தரமான சம்பவம் என்றே சொல்லலாம்.
காமெடிபோஸ் பாண்டியின் நண்பராக கோடி, அதான் நம்ம சூரி நடித்திருப்பார். அவர் போடும் காமெடி பஞ்சுக்களும் வசனங்களும் சிரிப்பை அடக்கமுடியாதவாறு இருக்கும். சோடா குடிக்கும் ஸ்டைலில் தொடங்கி, அவரின் டயலாக் டெலிவரி வரை அனைத்துமே கலக்கல் காமெடியாக இருக்கும். அதிலும், பஞ்சாயத்து நடக்கும்போது கோடியும் போஸ் பாண்டியும் இணைந்து செய்த ரகளை இருக்கே !! மறக்கவா முடியும் அந்த காமெடியை.
பாடல்இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை கம்போஸ் செய்யும்போது அவர் ஜாலி மூடில் இருந்திருப்பார் போல, படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடலும் வேற லெவல் ஹிட் ஆனது. படம் ரிலீஸ் ஆனபோது இந்த படத்தின் பாடல்கள் தான் கல்யாண வீடுகளிலும், கச்சேரிகளிலும், ஏன் ஒவ்வொருவரின் போனிலும் ரிங் டோனாகவும் காலர் டோனாகவும் ஒலித்தது. அந்த அளவிற்கு செம்ம வைப்பில் பாடல்கள் அமைந்திருக்கும். ஊதா கலரு ரிப்பன், இந்த பொண்ணுங்களே இப்படித்தான், என்னடா என்னடா, பாக்காத பாக்காத, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், அதிலும் செம்ம வைப் செய்யும் ராகம் என்றே சொல்லலாம்.

வரவேற்புஇந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன் சொன்னது போலவே, சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருமே இந்த படத்தை பார்த்து ரசித்தார்கள், இன்றும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியது. அவ்வப்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம். படத்தில் வரும் வசனங்களோடு சேர்ந்து பேசி வரும் 90ஸ் மற்றும் 2k கிட்ஸ் ஏராளம். இப்படிப்பட்ட எவெர்க்ரீன் படம் ரிலீஸ் ஆகி 10 வருடங்கள் ஆனது என்றால் அதை நம்பவே முடியவில்லை. ரசிகர்கள் இந்த 10 வருட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.