உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 இன் பொய்யான குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது

உலகையே உலுக்கிய கொடூரமான, இரக்கமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுத்து – 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்-குழந்தைகள் மற்றும்வெளிநாட்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 270 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

இந்த பேரழிவை அடுத்து, இலங்கை அரசாங்கம், அதன் சட்ட அமுலாக்க பிரிவினர், பாதுகாப்புப் படைகள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தன. பல ஆண்டுகளாக, உள்ளூர் மற்றும் சர்வதேச விசாரணைகள், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த குழு உறுப்பினர்களே இந்த பயங்கர அனர்த்தத்தின் காரணகர்த்தாக்கள் என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளன.

எவ்வாறாயினும், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட சமீபத்திய ஆவணப்படத்திற்கு உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சு விரும்புகிறது. இந்த ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பழியை இராணுவப் புலனாய்வு பிரிவு மற்றும் இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே அவர்கள் மீதும் அப்பட்டமாக மாற்ற முயற்சிக்கிறது.

36 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவையாற்றிய அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக, தாக்குதலை திட்டமிட்டு குண்டுதாரிகளுக்கு உதவியதாக தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது. மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சர்-ஆலோசகராக 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை பணியாற்றினார். அவர் 2019 ஜனவரி 3ஆம் திகதி இந்தியாவுக்குப் சென்று டெல்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 2019 நவம்பர் 30ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பினார்.

சனல் 4 வீடியோ ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இந்த அதிகாரி இலங்கையில் இருக்கவில்லை. மேலும், கூறப்பட்ட காலப்பகுதியில் (டிசம்பர் 2016 முதல் நவம்பர் 2019 வரை), இந்த அதிகாரி நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறையில் பணியமர்த்தப்படவில்லை அல்லது அந்தத் துறைகளில் அவர் எந்த உத்தியோகபூர்வ பொறுப்புகளையும் வகிக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் எவரும் எச்சந்தப்பத்திலும் அரசாங்கத்தின் சம்பள பட்டியலில் இருந்ததில்லை என்பதை பாதுகாப்பு அமைச்சு மீண்டும் வலியுறுத்துகிறது. எனவே, பாதுகாப்பு அமைச்சு இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுப்பதுடன், இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் ஆதாரமற்ற விடயமொன்றை வெளியிட்டதற்காக சனல் 4 மீது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உண்மையை வெளிக்கொணர்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் நடத்தப்பட்ட வெளிப்படையான வசதியளித்து விசாரணைகளை எளிதாக்குவதன் மூலம் அவை அவ்வாறு செய்யப்பட்டன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு (PCoI) ஆகியவற்றின் விசாரணைகள், தாக்குதலுக்கான தீவிரவாதக் குழுவின் பொறுப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் தேசிய பாதுகாப்பிற்கான துறைசார் மேற்பார்வைக் குழு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழிவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

மேலும், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் (AFP) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) ஆகியவற்றால் நடத்தப்பட்ட விரிவான விசாரணையும், அமெரிக்க நீதித் துறையின் தீர்ப்புகளும் உள்ளூர் விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது அவசியமாகும். சர்வதேச புலனாய்வு அமைப்பின் இந்த உறுதியான ஒப்புதல் விசாரணைகளின் துல்லியம் மற்றும் நேர்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தொடர்ச்சியான மற்றும் உண்மையான நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்ட போதிலும், சனல் 4இன் தூரநோக்கற்ற மற்றும் மோசமான நடத்தையானது முரண்பாடுகளை விதைப்பதன் மூலம் இலங்கை சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நேர்மையையும் பொறுப்பையும் உறுதியுடன் நிலைநிறுத்தியவர்களின் நற்பெயரையும் பாதுகாப்பையும் பாதிக்கிறது.

பாதுகாப்பு அமைச்சு கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து, புலனாய்வு பத்திரிக்கை துரையின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் அதே வேளை, அவர்களின் ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத செயல்கள் அல்லது விளைவுகளுக்கு சனல் 4 பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம். ஆவணப்படம். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, பாதுகாப்பு அமைச்சு இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் தேசத்தின் நல்வாழ்வுக்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.