IND vs PAK, Reserve Day: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மழை குறுக்கிட்டதால், நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து ரிசர்வ் டே ஆன இன்று ஆட்டம் தொடங்கியது. இன்றும் மழை காரணமாக மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மாலை 4.40 மணிக்கு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியான அறிக்கையில்,”முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர்-4 போட்டியில் ஹாரிஸ் ராஃப் இனி பந்து வீச மாட்டார்.
Fast bowler #HarisRauf will not be bowling any further in the Asia Cup Super 4 match against India as a precautionary measure. He felt a little discomfort in his right flank during the match yesterday and was subsequently taken for a precautionary MRI, which revealed no tear. He…
— Vishesh Roy (@vroy38) September 11, 2023
நேற்றைய போட்டியின் போது அவர் தனது வலது புறத்தில் சிறிது அசௌகரியத்தை உணர்ந்தார். அவர் பின்னர் ஒரு முன்னெச்சரிக்கை எம்ஆர்ஐக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குழுவின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.