ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஆவணங்கள் காற்றில் பறந்து சென்றபடி இருந்துள்ளன. அதனைக் கண்ட அப்பகுதியினர் காற்றில் பறந்த ஆவணங்களை எடுத்துப் பார்த்தபோது, அவை சமூக தணிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட செயலாக்கம் தொடர்பான அரசுத்துறை ஆவணங்கள் என்பது தெரியவந்தது. ஏராளமான அரசுத்துறை தொடர்பான ஆவணங்கள் காற்றில் பறப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆவணங்கள் கீழே கொட்டுவதாக வாகன ஓட்டிகள் சிலர் தெரிவித்த போதும் அதனை கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியினர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்த போது, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சமூக தணிக்கைத்துறை ஆவணங்களை ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டபோது இவ்வாறு காற்றில் பறந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரம் யூனியன் கிராம் ஊராட்சி ஆணையாளர் சேவுகபெருமாளிடம் பேசினோம், “ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட சமூக தணிக்கை தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்காக மூடைகளில் கட்டிக்கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக மூடை அவிழ்ந்து ஆவணங்கள் கீழே கொட்டி காற்றில் பறந்துள்ளன. இது பற்றி எனக்கு தகவல் வந்ததும் உடனடியாக ஊழியர்களுடன் சென்று ஒரு ஆவணங்கள் கூட விடுபடாமல் அனைத்தையும் தேடி கண்டுபிடித்து கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணங்களை கொண்டு வந்த ஊழியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY