சென்னை: தமிழ்நாடு அரசு நாளை (15ந்தேதி) தொடங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனர்களுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது. அது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. திமுக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஆட்சிக்கு வந்ததும், அறிவித்த பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி, அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட […]