100வருடங்களை விடப் பழமை வாய்ந்த யடியந்தோட்டை – கராகொட பாலத்தை புனரமைக்க நடவடிக்கை

100 வருடங்களை விடப் பழமையான யடியந்தோட்டை – கராகொட பாலத்தை நவீனமயப்படுத்திப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன சபரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் இந்நிகழ்;ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக 360 மில்லியன் ரூபா நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் சப்ரகமுவ மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர்களான ஸ்ரீபால கம்லத், ரஞ்சித் சியம்பலாபிடிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.