டில்லி இந்திய வெளியுறவுத்துறை கனடா தனது நற்பெயரைக் காத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதில் இந்திய அரசின் உளவாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கனடா அரசு கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்திய அரசு இது தொடர்பாகக் […]