இலங்கையின் தூதுவராக தனது சேவைக் காலம் முடிவடைந்து செல்லும் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசதே “ஈரான் – இலங்கை இரு தரப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு இராஜதந்திர பதவிக் காலத்தில் தொடர் ஒத்துழைப்பை வழங்கியமை” தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று மற்றும் உலக பொருளாதார நெருக்கடியில் சவால் மிக்க காலப்பகுதியில் வெளிநாட்டமைச்சராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் வழங்கிய ஒத்துழைப்புக்களை பாராட்டும் நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்ற போது பிரதமரை சந்தித்த தூதுவர் இவ்வாறு நினைவுபடுத்தினார்.
கடினமான மற்றும் சவால் மிக்க காலப் பகுதியில் ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பாக பிரதமர் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசாதே தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக தூதுவர் விசேட முயற்சிகள் மற்றும் இலங்கையின் வளர்ச்சிக்காக ஈரான் நாட்டினால் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகளை சான்றுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் விடாமுயற்சி என்பன தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பாராட்டுக்களை வழங்கினார்.
இதன்போது சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமத், இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிடிய, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக மற்றும் ஈரான் தூதுவர் அலுவலகத்தின் பொருளாதார மற்றும் கொன்சியூளர் பிரிவின் தலைவர் கே. சொஹீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.