நெல்லை: நூதன முறையில் ஏ.டி.எம்-களில் கைவரிசை… சிசிடிவியால் சிக்கிய வடமாநிலக் கொள்ளையர்கள்!

நெல்லை மாநகரப் பகுதிகளிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்-களை குறிவைத்து ஒரு கும்பல் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. குறிப்பாக எஸ்.பி.ஐ மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளின் பணத்தை ஏ.டி.எம் இயந்திரங்களிலிருந்து நூதனமாக கொள்ளையடித்திருக்கின்றனர்.

கொள்ளை நடந்த ஏ.டி.எம் மையம்

அந்தக் கும்பல் நெல்லையில் தங்கியிருந்து கடந்த சில தினங்களாக இந்தக் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருக்கிறது. பொதுவாக, அடுத்தவர் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டுகளைத் திருடி கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், இந்தக் கும்பல் தங்களிடம் உள்ள ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நேரடியாகக் கொள்ளையடித்திருக்கிறது.

அதாவது, தங்களின் வங்கிக் கணக்குக்கான ஏ.டி.எம் அட்டைகளைப் பணம் வழங்கும் இயந்திரத்தில் போட்டு, பணம் எண்ணிக் கொண்டிருக்கும்போது மிஷினை ஆஃப் செய்து, சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆன் செய்தால், ஏற்கெனவே எண்ணிய பணம் வெளியே வந்துவிடுமாம். ஆனால் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் குறைவது இல்லையாம்.

ஏ.டி.எம் மையம்

இப்படியான டெக்னிக்கைப் பயன்படுத்தி, நூதனமான முறையில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். வங்கிப் பணம் திருடு போவதை அறிந்து அதிர்ச்சியடைந்த வங்கியின் மேலாளர், நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், வங்கி ஏ.டி.எம் மையங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் அடிக்கடி ஏ.டி.எம் மையங்களுக்குள் வந்து செல்வது தெரியவந்தது.

அதையடுத்து தனியார் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். அதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முப்பட், சலீம் ஆகிய இரு இளைஞர்கள் பிடிபட்டனர். 25 வயது நிரம்பிய இருவரும் நெல்லையில் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைதுசெய்த போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தினர்.

கைது

கொள்ளையர்கள் இருவரையும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது இருவரும் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை போலீஸார் தேடிவந்த நிலையில், இருவரும் சாந்திநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. வங்கி ஏ.டி.எம் மையத்தில் நடந்த இந்த நூதன கொள்ளை, அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.