அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ஜனவரி 22ம் தேதி கோலாகலம்| Ayodhya Ram temple immersion; Kolagalam on 22nd January

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இக்கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக.,5ல் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது.

latest tamil news

கோவிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாதத்திற்குள் முதல்தளம் முடிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.