`என்னைத் தாக்கி, முதுகில் PFI என எழுதினர்!' – பொய்ப் புகார், நாடகம் – ராணுவ வீரர் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் ராணுவ வீரர் ஷினே குமார் என்பவர், கேரள மாநிலம், கொல்லம் பகுதிக்குச் சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லம் மாவட்டத்தின் கடைக்கல் என்ற பகுதியில் அவர் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத 6 பேர்கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்து, அவரின் சட்டையைக் கிழித்து, அவரது முதுகில் `PFI’ என்று பச்சை நிற பெயின்ட்டில் ஆங்கிலத்தில் எழுதிச் சென்றதாகவும், இந்தியளவில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினரால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், தனது மேலதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார்.

நாடகம்

ராணுவ வீரர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த கேரள காவல்துறைக்கு ராணுவம் பரிந்துரைத்தது. அடுத்த நாள், கேரளா மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த விவகாரம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொல்லம் மாவட்டம், கடக்கல் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தியதில், பல `திடுக்’ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து கேரளா காவல்துறை, “ராணுவ வீரரான ஷினே குமார் பிரபலமடைய விரும்பியிருக்கிறார். அதன் காரணமாக, தன் நண்பனுடன் சேர்ந்து தன் சட்டையைக் கிழித்துக் கொண்டு, அதில் பச்சை நிற பெயின்ட் மூலம் `பி.எஃப்.ஐ’ என ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பச்சை நிற பெயின்ட், பிரஷ், கைகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட டேப், சட்டையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவை, அவருடைய நண்பரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

பயன்படுத்தப்பட்ட பொருள்கள்

இது குறித்து அவருக்கு உதவிய அவரின் நண்பரிடம் விசாரித்ததில், ‘ஷினே குமார் பிரபலமடைய வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். அதற்காக என்ன செய்யலாம் என நாங்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டோம். இந்தச் சம்பவம் நடந்தபோது, நான் மதுபோதையில் இருந்தேன். முதலில் `DFI’ என அவரது முதுகில் எழுதினேன், ஆனால் ஷினே குமார் அதை சரிசெய்து `PFI’ என எழுதச் சொன்னார். அதன்பிறகு நான் அதை திருத்தினேன்.

பின்னர் அவரை நான் அடிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் குடித்திருந்ததால் என்னால் முடியாது என்றேன். அப்போது அவர் தரையில் படுத்துக்கொண்டு, அவரது வாய் மற்றும் கைகளை டேப் செய்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதனால், நானும் அதன்படி செய்துவிட்டு சென்றுவிட்டேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். எனவே, ராணுவ வீரரிடம் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறது. பிரபலமடைய திட்டமிட்டு செயல்பட்ட இந்திய ராணுவ வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.