உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இன்று மோதல்

திருவனந்தபுரம்,

10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. முதல் இரு நாளில் நடந்த பயிற்சி ஆட்டங்களில் மழையின் ஆக்கிரமிப்பே அதிகமாக இருந்தது. 2 ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இன்னொரு ஆட்டம் பாதியில் ரத்தானது. இதில் இந்தியா- இங்கிலாந்து ஆட்டமும் அடங்கும்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) இரு பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் ஒரு ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவும், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்தும் சந்திக்கின்றன. காயத்தில் இருந்து மீண்டு வரும் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்திலும் ஒரு பேட்டராக மட்டும் விளையாட உள்ளார். கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

நாளையுடன் பயிற்சி ஆட்டங்கள் நிறைவடைகின்றன.இந்திய அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நாளை நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் எதிர்கொள்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.