சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக ஆனந்த் பாட்டீல் இருந்து வந்தார். இவர் சமீபத்தில், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, ஆளுநரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் […]