ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று (அக்.,4) கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற 35 கி.மீ கலப்பு நடைப்போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி, பாபு ராம் இணை 5 மணி நேரம் 51 நிமிடங்கள் 14 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றது.
வில்வித்தை
கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவின் ஜோடி, 159 புள்ளிகள் பெற்று கொரியா ஜோடியை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
பாட்மின்டன்
மகளிர் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேஷியா வீராங்கனை பட்ரி குசுமா வர்தனியை 21-16, 21-16 என்ற நேர் செட்டில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியா சாதனை
நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டியுள்ளது. இதன்மூலம் ஆசிய விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அளவாக அதிக பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 2018ல் நடந்த ஆசிய விளையாட்டில் 70 பதக்கங்கள் வென்றதே நமது முந்தைய சாதனையாக இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement