சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை – அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன

சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை, சமயங்களை அசௌகரியப்படுத்தல், இனபேதம், சிறுவர் துஷ்பிரயோகத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு ஏதுவானதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு, அதனால் சமூகத்தை நேர்வழியிலிருந்து திசை திருப்பக்கூடிய விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்காகவே இச்சட்டம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது “சமூக ஊடகங்களுடன் தொடர்புபடும் புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்காக உருவாக்கப்படவுள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களினால் அப்பாவி மக்களுக்கு பலர் பல்வேறு விதமான அசௌகரியங்கள், சிரமங்கள் மற்றும் வெறுப்புக்கள், குரோதம், ஆத்திரம், போன்றவற்றை ஏற்படுத்துவதனால் மனித வாழ்க்கையில் பாரியளவில் அழிவுகளை சந்தித்தவாறு செயற்படுவதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் இச்சட்டத்தினால் சிறந்த வெற்றிகரமான சந்தர்ப்பங்களே ஏற்படும் என சுட்டிக்காட்டினார்.

உலகில் பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் எவ்வித சமூக ஊடகங்களும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அவ்வாறான நாடுகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட வெகுஜன ஊடக அமைச்சர், அந்நாடுகளில் எவ்வித தணிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வில்லை.

அவ்வாறே நமது நாட்டிலும் இப்புதிய சட்டம் சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என தெளிவுபடுத்தினார்.

அத்துடன்; மிகவும் சிறந்த வாதப்பிரதிவாதங்கள், விமர்சனங்களினால் ஏற்படக் கூடியது என்றும் ஆனால் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, வெறுப்புக்களை பரப்பும், சமய மற்றும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பிற்கு எச்சரிக்கையானவற்றிற்காக ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் பிரதான நோக்கமாக இதனை முன்வைக்க வேண்டும், எந்த அமைச்சராக இருந்தாலும் அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சருக்கு இதற்கான தமது அபிப்பிராயங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.