வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் இரு வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் குல்ஹாம் மாவட்டத்தில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புடையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்புடையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.
இதே போன்று ரஜோரி மாவட்டத்தில் காலக்கோட்டே வனப்பகுதியில் மற்றொரு பயங்கரவாதியை பாதுகாப்புடையினர் சுட்டுக்கொன்றனர். இரு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement