நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு| Nobel Prize 2023 for Literature for Norwegian author Jon Fosse

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்.,2 முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,5) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் போஸிக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.