கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் உள்ளிட்ட 2 பேர் கைது!

கோவை சரவணம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஓர் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியின் நிர்வாக அதிகாரி விஜயக்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முரளிதரன் மீது அதிர்ச்சி புகார் எழுந்தது.

கோவை

அதன்படி இருவரும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாணவிகள், தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலியல் தொல்லை

இதனால் அவர்கள் தமிழ்நாடு அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது புகார் தெரிவிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

போக்சோ வழக்கு

இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் அவர்கள் மாணவிகளை மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் விஜயக்குமார், முரளிதரன் ஆகிய இருவரையும் போலீஸ் போக்சோ சட்டப் பிரிவில் கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.