Indian Student Stabbed In US Gym Dies, Attacker Says Found Him Weird | அமெரிக்காவில் கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கத்திக்குத்தில், படுகாயம் அடைந்த இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 24 வயதான வருண் ராஜ் என்ற இந்திய மாணவரை, ஜோர்டான் ஆண்ட் ராட் (24) என்ற அமெரிக்க வாலிபர் கத்தியால் குத்தினார். அதில் படுகாயம் அடைந்து வருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இருப்பினும் அவரை காப்பாற்றிவிட டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வருண்ராஜ் வால்பரைசோ பல்கலையில் கணினி அறிவியல் படித்து வந்தார்.

ஜோர்டான் ஆண்ட்ராட்டை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், வருண் ராஜ் உடன் நேரடியாக பேசியது கிடையாது. ஆனால், அவரால் நமக்கு அச்சுறுத்தல் உள்ளது என சிலர் தன்னிடம் கூறியதாக ஜோர்டான் ஆண்ட்ராட் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.