வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது இல்லத்தில் நேற்றிரவு (நவ.,08) தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். பிரிட்டனில் வசிக்கும் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்சதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி தீபாவளி பண்டிகை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அவரது மனைவி அக்சதா இந்திய தொழில் அதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவ.,12ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement