Border violation by Pak, our security forces soldier killed | எல்லையில் பாக்., அத்துமீறல்:நம் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நம் பாதுகாப்புப் படை வீரர் உ வீரமரணம் அடைந்தார்

ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் அவ்வப்போது அத்துமீறுவதை, நம் அண்டை நாடான பாகிஸ்தான் வீரர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், நம் வீரர்கள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து அந்நாட்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படை தலைமை காவலர் லால் பாம் கிமா, 50, பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.