Kanchi Peetadhipati blessed the devotees in Varanasi | தீபாவளி உத்ஸவ்:வாரணாசியில் விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாரணாசி: தீபாவளி உத்ஸவத்தையொட்டி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாரணாசி வந்தார்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடமாநிலங்களில் விஜயயாத்திரை மேற்கொண்டுள்ளார். ஆந்திர , கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டார். கடந்த மாதம் நவாரத்திரியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி, அனுமன்காட் பகுதியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் தங்கி தினமும் பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கினார்.

latest tamil news
latest tamil news

latest tamil news

தீபாவளியையொட்டி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் தங்கியிருப்பார் என சங்கர மடத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி வந்த ஸ்ரீவிஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் லக்னோவில் உள்ள சங்கர மடத்தில் தங்கி பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து
அனுமன்காட் பகுதியில் தீபஒளி ஏற்றி அன்னபூர்ணஜெபம் மற்றும் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.