Servant of the Constitution I am the opinion of the Chief Justice | அரசியலமைப்பின் சேவகன் நான் தலைமை நீதிபதி கருத்து

புதுடில்லி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நேற்று அலுவல்கள் துவங்கிய உடன், வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாறை கூறுகையில், ”கொலீஜியம் அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும்,” என்றார்.

அப்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

உங்கள் மனதில் எழும் விருப்பத்தை சொல்ல, உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்தியாவின் தலைமை நீதிபதியாக, அதை விட முக்கியமாக, முதலில் ஒரு நீதிபதியாக, நான், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் சேவகன்.

எனக்கு வகுக்கப்பட்ட நிலைப்பாட்டை தான், நான் பின்பற்ற வேண்டும். இது தான் பிடிக்கும். இதைத் தான் செய்வேன் என, என்னால் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த அக்டோபரில், வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக நியமனம் செய்வதை எதிர்த்து, வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாறை உள்ளிட்ட ஏழு பேர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.